|
[19 May 2009 01:20 GMT]
கொக்குவில் இந்து கல்லூரி கல்லூரி பழைய மாணவனும், எமது இணையதள குழுமத்தின் நிர்வாக உறுப்பினருமான தம்பிராசா முகுந்தன் அவர்கள் 18/05/2009 அன்று காலை 5.00 மணிக்கு முள்ளிவாய்க்கால் கிராமத்தில் சாவடைந்தார்.
இலங்கை வயம்ப பல்கலைகழக பழைய மாணவராகிய இவர் முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் க.பொ.தா உயர்தர தகவல் தொழில்நுட்ப, கணித ஆசிரியராக கடமை ஆற்றும் போதே சாவடைந்தது குறிப்பிடதக்கது.
யாழ்ப்பாணம் ஊரெழு கிராமத்தை பிறப்பிடமாக கொண்ட முகுந்தன் கொக்குவில் இந்துக் கல்லூரி க.பொ.த 97 ம் ஆண்டு கணிதபிரிவு மாணவராவார்.
எமது கல்லூரி வளர்ச்சிக்காக கொக்குவில் இந்துவின் பழைய மாணவர்களை ஒன்றினைக்கும் பணியில் அயராது உழைத்தவர்.
தனது கல கலப்பான சுபாவத்தால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்த முகுந்தன் சுய விளம்பரம் இன்றி 5 வருடங்களுக்கு மேலாக எம்மோடு தோள் சேர்ந்து உழைத்த எமது கல்லூரிதாயின் புதல்வனுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கை ஆக்குகின்றோம்.
இவரை இழந்து தவிக்கும் இவர்தம் குடுபத்தினர் துயரில் நாமும் பங்கிடுத்துகொள்ளும் அதேவேளை அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்திக்கின்றோம்.
கொக்குவில் இந்து இணையத்தள குழுமம்.
|